யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!
சில தினங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு, எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.
அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசு சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று! அதாவது 35. மகள் சொன்னாள் அவருக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அவர் வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.
புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு விருப்பம் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.
கடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன் டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் "அண்ணி உங்களுக்கு என்ன வயது?" என்று! எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.
அதற்கவர் "நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41" என்றார்.
மகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு இளமை அந்த பெண்மணியிடம்!
இந்தப் பெண்கள் ஏன் வயதை சொல்வதில் பின்னடிக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விடை இல்லை.
|
Monday, March 14, 2016
யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!
Subscribe to:
Posts (Atom)