விதியை நம்புதல்
நமக்கு ஏற்படக்கூடிய நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்று நம்பிக்கை கொள்வதுதான் விதியை நம்புவதாகும்.
விதியை நம்புவது இஸ்லாமிய நம்பிக்கையில் முக்கியமான ஒரு அம்சம். எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப் பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்றாலும், விதியைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சர்ச்சை செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார்கள்.
ஏனென்றால் ஒரு கோணத்தில் பார்க்கும் போது விதி இருப்பது போலவும், இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது விதி இல்லாதது போலவும் ஒரு மயக்கம் மனிதனுக்கு ஏற்படும்.
விதி என்று ஒன்று இருந்தால் நல்லவனாக, கெட்டவனாக நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்ற கேள்வி அதில் எழும்.