அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Tuesday, June 28, 2011

எடை கூடாமல் இருக்க சில யோசனைகள்


* தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

* கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.

* பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ள வேண்டும்.

* படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

* இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

* முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஃபாஸ்ட்ஃபுட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.

Saturday, June 25, 2011

குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?

ஐயம்: குழந்தைபிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா? என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், "இன்ன வாரத்தில் இன்ன நாளில் இன்ன நேரத்தில் வாருங்கள். குழந்தையோடு செல்லுங்கள்" என்று டாக்டர்கள் கூறி அதன்படி குழந்தையையும் பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். இது முரண்பாடு தானே? (மின்னஞ்சல் வழியாக சகோதரர் வேணுகோபாலன்)
 தெளிவு: அன்பு சகோதரர் வேணுகோபாலன் அவர்களே!

உங்களது இந்தக் கேள்வி, தங்களால் சத்தியத்தை அறிய, சந்தேக நிவர்த்திக்காக தெளிவு பெற எழுப்பப்பட்ட ஒரு கேள்வி எனும் அடிப்படையில் இதை நாம் அணுகுவதோடு உங்களுக்கு எங்களது பாராட்டுகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.

" ... அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில்லை ..." (அல்குர்ஆன் 35:11).

"நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே ..." (அல்குர்ஆன் 31:34).

"ஒவ்வொரு பெண்ணும் (தன் கருவறையில்) சுமந்து கொண்டிருப்பதையும் அவை சுருங்கிக் குறைவதையும் விரிந்து கொடுப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் தீர்மானிக்கப் பட்ட அளவு இருக்கின்றது" (அல்குர்ஆன் 13:8).

"மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஐயமிருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்!) நாம் நிச்சயமாக உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், அடுத்த கட்டத்தில் அலக்கிலிருந்தும், அதையடுத்து அரைகுறைத் தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்து, பின்பு குழந்தையாக வெளிப்படுத்துகிறோம் ..." (அல்குர்ஆன் 22:5)

போன்ற இறைவசனங்கள் உங்களுடைய ஐயத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம்.

முதலாவதாக,

ஒரு பெண் கருத்தரித்தால் அப்பெண்ணுக்கு இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான காலக்கெடு என்பது அப்பெண் கருத்தரித்ததிலிருந்து 9 மாதங்கள் 9 நாட்கள் எனப் பொதுவாகக் கூறுவர். இக்கணக்கு அப்பெண்ணுக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கணக்கைச் சொல்வதற்கு ஒரு மகப்பேறு மருத்துவர்கூட இப்போது தேவையில்லை.
http://www.babycenter.com/pregnancy-due-date-calculator என்ற தளத்தில் கடைசியாக மாதவிலக்கு ஏற்பட்ட நாளைக் குறிப்பிட்டால் குழந்தை பிறக்கப் போகும் தேதி, மாதம், ஆண்டு எல்லாம் சொல்லி விடும். அந்தக் கணக்குச் சரியாகவுமிருக்கும்; சற்றே முன்-பின்னும் இருக்கும்.

"கம்ப்யூட்டரே தெரிந்து கொண்டு சொல்லும்போது கடவுளுக்குத் தெரிந்தாலோ தெரியா விட்டாலோ நமக்கென்ன?" என்ற கேள்வி வரும்.

கம்ப்யூட்டரையும் அதற்கான மென்பொருளையும் உண்டாக்கியவன் மனிதன். அந்த மனிதனையே உண்டாக்கியவன் இறைவன் என்பது முஸ்லிம்கள் மட்டுமின்றி, கடவுளை நம்புகின்ற எல்லா ஆத்திகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

கம்ப்யூட்டருக்கும் மருத்துவருக்கும் ஒரு பெண் கருவடைவதற்கு முன்னர், இன்ன நாளில், இன்ன நேரத்தில், இன்ன இனத்தில், இன்ன இடத்தில், இன்ன வகையில் குழந்தை பெறுவாள் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், இறைவனுக்கு அவையனைத்தும் முதல் மனிதனைப் படைக்கும்போதே அவனுடைய எத்தனையாவது தலைமுறையில் இந்தப் பெண் பிறந்து எத்தனை பிள்ளகளை எவ்வாறு, எப்போது பெற்றெடுப்பாள் என்பது துல்லியமாகத் தெரியும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையாகும். துல்லியம்தான் இங்குத் தலையாய பேசுபொருள்.

குறிப்பாக, முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு, கி.பி எழுநூறுகளின் தொடக்கத்தில் அருளப்பட்டு, அவர்கள் இறைவேதம் என்று நம்புகின்ற குர்ஆன் அடிப்படையாகத் திகழ்கின்றது. ஒரு குழந்தை கருவுருவதைப் பற்றி அது கூறுவதைக் கேட்போம்:

"(பெண்ணின் சினைமுட்டையோடு) கலவையான விந்திலிருந்து நாமே மனிதனைப் படைத்தோம் ..." (அல்குர்ஆன் 76:2).

முதன் முதலாகக் கருவுலகைப் பற்றி அறிவியல் உலகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1615இல்தான். ஆனால், "பெண்ணுடைய சினை முட்டையோடு ஆணுடைய விந்து கலந்து குழந்தை உருவாகிறது" என்று குர்ஆன் அறிவிப்பது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்பது வியக்க வைக்கும் செய்தியன்றோ!

There are a multitude of statements in the Quran on the subject of human reproduction which constitute a challenge to the embryologist seeking a human explanation for them. It was only after the birth of the basic sciences which contributed to our knowledge of biology and the invention of the microscope, that humans were able to understand the depth of those Quranic statements. It was impossible for a human being living in the early seventh century to have accurately expressed such ideas. There is nothing to indicate that people in the Middle-East and Arabia knew anything more about this subject than people living in Europe or anywhere else.

முழுதும் படிக்க
http://www.sultan.org/articles/QScience.html

குர்ஆன் கூறுவதைக் கேட்ட விஞ்ஞானிகளின் வியப்பு ஆவணமாக்கப் பட்டுள்ளது.
http://www.youtube.com/watch?v=XaSfE1DW2-w
 
http://www.slideshare.net/moralsandethics/scientists-comments-on-h-quran

இரண்டாவதாக,

உங்களுடைய கேள்வியான இயல்புக்கு மாற்றமாக நடைபெறும் சிஸேரியன் விஷயத்துக்கு வருவோம்.

கருவைச் சுமக்கும் தாயின் உயிருக்கோ கருவிலிருக்கும் மகவின் உயிருக்கோ ஆபத்து ஏற்படும் என்ற நிலை ஏற்படும்போது அந்த ஆபத்தைக் களைவதற்கான கடைசியாகக் கையாளும் முயற்சியாகத்தான் சிஸேரியன் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

 நாளடைவில், அது நாள்-நட்சத்திரம் மீது மோகம் கொண்ட சிலரால், இயல்பான பேறுநாளைக்கு முன்னதாகத் தேதி நிர்ணயிக்கப்பட்டுச் செயற்கையாக சிஸேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.

ஆனால், எல்லா சிஸேரியன்களும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் நேரத்திலோ மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்திலோ துல்லியமாக நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை. காரணம், மகப்பேற்றில் கடைசி நேர இடைஞ்சல்கள் பல உள்ளன. நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்.

துல்லியத்தில் மனிதர் தோற்பர்; இறைவன் தோற்பதில்லை. ஏனெனில், மனிதனின் அறிவு வரையறுக்கப் பட்டது; இறைவனின் அறிவுக்கு வரையறை இல்லை.

அவனே முற்றாய் அறிந்தவன்.
 

Friday, June 24, 2011

மனைவியின் கடமைகள்

இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.

இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.

மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.

இந்த இறைக் கட்டளையை ஏற்று, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். கணவனுக்குக் கட்டுப்படுதல் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1079


இந்த நபிமொழி கணவனுக்குக் கட்டுப்படுதலின் உச்சக்கட்டத்தைத் தெரிவிக்கும் செய்தியாகும். இந்தச் செய்தியைப் படிக்கும் பெண்கள் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வர்.

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் கடமை கணவனின் இடத்தில் மற்றொரு ஆணை வைக்காமல் இருப்பதாகும். தன் கற்பொழுக்கத்தைப் பேணுவதாகும். கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது இந்த ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் தான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 33:35)

“உங்கள் படுக்கையை அடுத்தவர்களுக்கு வழங்காமல் இருப்பதும் அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1083


பெண்கள் ஒழுக்கமாக வாழ்வது மிக முக்கியம் என்பதால் பெண்ணின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் பல காரியங்களை இஸ்லாம் தடுத்துள்ளது. அதைப் பெண்கள் பேணி, கடைப்பிடித்தால் அவர்களது வாழ்க்கை ஒழுக்கமிக்கதாக அமையும்.

அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது

ஆண்களைக் கவரும் வண்ணம் அலங்காரங்களை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது. தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும் வசனங்களாகும். “பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” என்ற ஒரு அறிவுரை இந்த வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது.

அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள் ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.

உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்ரில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப் படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா’ புர்கா’ துப்பட்டி’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஹிஜாப் என்பது பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை முதலில் இஸ்லாமிய பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அல்லது அவர்களின் அழகு, அல்லது அவர்களின் இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்க விரும்புகின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆண்களின் அழகையோ, கட்டுடலையோ, கொள்ளை கொள்ளும் நிறத்தையோ பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. நிச்சயமாக இதையெல்லாம் பெண்கள் விரும்பவே செய்வர்.

கணவன் கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது அவனிடம் முழுமையான ஆண்மை இருக்கும் என்று நம்புவதால் தான். கணவன் நல்ல அழகுடனும் நல்ல நிறம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது மற்ற பெண்களிடம் பெருமையடிக்கவும் தங்கள் வாரிசுகள் அழகுடன் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் தான். ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதில் இருந்தும், ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிரிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதை எல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும் அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந் திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும் ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. எனவே ஒழுக்கத்தை பேணும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதிகளை அந்நியர்களிடம் மறைப்பதும் அலங்காரங்களை கணவனுக்கு மட்டும் வெளிபடுத்துவதும் அவசியமாகும்.

ஆனால் இன்று அரைகுறை ஆடைகளுடன் அந்நியர்களுக்கு மத்தியில் பெண்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. வீட்டிற்கு வரும் வேலையாட்கள், பால்காரர்கள், கேபிள் காரர்கள் என்று ஏராளமான அந்நியர்களுக்கு முன்னால் நைட்டியை அணிந்து கொண்டு காட்சி தருவது மேற்கூறிய இறைவசனத்தின் ஒழுக்க அறிவுரைக்கு முரணானதாகும். இரவு நேர ஆடைகளை இரவு நேரத்தில் வீட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெருவில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது, மளிகைக் கடை, பால் கடைகளுக்கு போவது ஒழுங்கீனமாகும்.

சில பெண்கள் பர்தா அணியாமல் மெல்லிய சேலைகளை அணிந்து கொண்டு வெளியில் சென்று வருவதும் இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்கு மாற்றமானதாகும்.

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பவர்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக் கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி) கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக் கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். (ஏன்?) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4316


மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கவனத்தில் கொண்டு ஒழுக்கத்தை முஸ்லிம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

-அபுரபீஹா

நாமும் நமது மரணமும்

மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4: 78)

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல் குர்ஆன் : 3:145)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு 'லா இலாஹ இல்லல்லாஹூ'என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:அபூஸயீத் அல் குத்ரி (ரலி) முஸ்லீம் 1672)

மரணம்! நமது பிறப்போடு சேர்த்து அனுபப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டிய கட்டாய வாழ்க்கைச் சுவை! இவ்வுலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு ஒவ்வொரு ஆன்மாவையும் பிரவேசிக்கச் செய்யும் ஒருவழிப்பாதை. தெய்வீக விசுவாசங்கள் திண்ணமாக உண்மையாகும் திடமான சம்பவமே மரணம்.

நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கும் இம்மரணம் ஒவ்வொருவருக்கும் எங்கே வரும்? எப்போது நேரும்? எந்த ரூபத்தில் நிகழும்; என்பதை எவராலும் அறிய முடியாத விஷயமாக வல்ல இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.


மனிதர்களிடம் நிகழ்ந்தே தீரக்கூடிய சில விஷயங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததாக அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக பிறப்பும் இறப்பும்! ஏந்த மனிதனும் தான் விரும்பிய மாதிரி பிறக்கவோ, தான் விரும்பியபோது மரணிக்கவோ முடிவதில்லை. மாறாக, அவைகளெல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடப்பவையாக உள்ளன. வேறெவராலும் இவற்றை நிகழ்த்த முடிவதில்லை. காரணம், இவைகளெல்லாம் மகத்துவமிக்க அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய, நிகழ்த்தக்கூடிய மறைவான ஞானங்களாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். 

ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார். கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன் ( அல்குர்ஆன்: 31 : 34)

அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய இந்த விஷயங்கள், அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகவும் உள்ளது. இவைகள் மனித இனத்தின் மீது விதிக்கப்பட்ட அடிப்படைகளாகவும் உள்ளன. பிறப்பு, இறப்பு, மழை, சம்பாத்தியம், மறுமை இவற்றை வேண்டாம் எனக்கூறி மனிதரில் எவரும் ஒதுக்கித் தள்ளவோ தப்பிக்கவோ முடியாது. ஒவ்வொருவரும் மேற்கூறிய விஷயத்தில் ஏக இறைவனின் உதவியையும், நாட்டத்தையும் பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.மனிதர்களில் பெரும்பாலோர் தங்களின் மரணத்தைப் பற்றி சிந்தனையில்லாமல் மனம் போன போக்கில் உலா வருகின்றனர். நொடிப்பொழுதில் மறைந்து விடும் உலகின் மீது மோகங்கொண்டு நிலையான மறுமையையும் மரணத்தையும் வெறுக்கின்றனர். யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள். 

வல்ல நாயன் அல்லாஹ் கூறுகின்றான்,  ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்,  பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:49)

மேலும், உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் மக்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு மலக்கைக் கொண்டு தான் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவர் பெயர் இஸ்ராயில். அவரைத்தான் அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர் தான் உயிரைக் கைப்பற்றும் வானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதி மனிதரைப் படைப்பதற்காக அல்லாஹ் பூமியிலிருந்து மண்ணெடுத்து வரச் சொல்லி ஒவ்வொரு மலக்கையும் அனுப்புகிறான். அவர்களுக்கு பூமி மண் தர மறுத்தது. அல்லாஹ் 'இஸ்ராயிலை அனுப்பியபோது பூமி மறுத்தபோதும் மண் எடுத்துச் சென்றதாகவும் அதனால் மனிதர்களின் உயிரைக் கைப்பற்ற அவரையே அல்லாஹ் நியமித்து விட்டதாகவும் ஒரு கதை இஸ்லாமிய மக்களிடத்திலே நிலவுகிறது.

உண்மையில் 'இஸ்ராயில்' என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில் ' என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களுக்கென நியமிக்கப்;பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுகிறீர்கள். (அல் குர்; ஆன் 32:11)

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று திருமறைக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் சான்று கூறுகின்றன.

இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் இடந்தரக் கூடாது.

உயிர்பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும்

உம்முஸலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமின்' என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678)

நல்லோர்களின் உயிர்களை கைப்பற்றுதல்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை அஞ்சி நன்மைகள் செய்து மறுமை வாழ்வே சிறந்தது என்று கூறி நல்லோராக வாழும் நிலையில் அவர்களின் உயிர் கண்ணியப்படுத்தப்படும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்.

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். (ஆயிஷா(ரலி) திர்மிதி 987)

மறுப்போரின் உயிர்கள்

படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுகித்துக் கொண்டு அவனை மதிக்காமல், பணியாமல் அல்லாஹ்வை மறுக்கும் தீயோர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது கடுமையான வேதனை செய்யப்பட்டு அவர்களின் உயிர் கைப்பற்றப்படும். அல்லாஹ்வை மறந்து உலகை அதிகம் நேசித்து எல்லா வகையான வாழ்வியல் அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்துப் பெற்றுக் கொண்டு நன்றிகெட்ட முறையில் அல்லாஹ்வை வெறுக்கின்றனர்;. அதுமட்டுமன்றி எந்த வேத ஆதாரமும் இல்லாமல் சான்றுகளும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று வேறு தெய்வமும் உள்ளது என கூறும் கொடுமையான இணைவைப்பைச் செய்த மறுப்போரின் உயிர்களை வானவர்கள் கடினமான வேதனைச் செய்து கைப்பற்றுவார்கள். 

திருமறையில் வல்ல அல்லாஹ், 
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது,  சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்;! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையை இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன் (அல் குர்ஆன்: 8: 50,51)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) திர்மிதி 992)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (இவா) ஓய்வு பெற்றவராவார். அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனின்; எல்லாவிதமான தொல்லையிலிருந்தும் மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள். மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்ற நிம்மதி) பெறுகின்றன. (அபூகதாதா ஹாபினுஸ் ரிப்யி (ரலி) முஸ்லிம் 1932)

கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா தன் திருமறையில்:
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக தங்குவிர்;கள்.பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல் குர்ஆன்: 16:28,29)

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாடு துறந்துச் சென்றோம்.எங்களுக்காகப் பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்று விட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு கஃபன் அணிவிக்க   துணி ஒன்று மட்டும் (அவருடைய உடமைகளில்) கிடைத்தது. அதைக் கொண்டு அவரது தலைப்பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. ஆகவே அவரது தலைப்பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது இத்கீர் எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டடார்கள். (அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத்(ரலி) முஸ்லீம் 1715)

ஆகவே மரணத்தை பயந்து அல்லாஹ்வை அஞ்சி நடக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

Saturday, June 4, 2011

உண்மை வரிகள்....!

என்ன சொல்கிறாய் என்பதை விட என்ன செய்கிறாய் என்பதே நீ ...

நம்பிக்கை தான் பார்க்க முடியாத விஷயங்களுக்கு ஒரே ஆதாரம்...

பிரச்சனைகள் தான் மனிதர்கள் யார் என்று காட்டுகின்றன...

பொறுமையும் மனோதிடமும் எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும்...

உனது உயர்ந்த திட நம்பிக்கைகளுக்கு நீ உண்மையாயிரு...

மனிதனுடைய மிகப் பெரிய குறைபாடு என்பது அவநம்பிக்கைதான்...

உனது உயர்ந்த திட நம்பிக்கைகளுக்கு நீ உண்மையாயிரு...

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது

உங்களைத் தவிர வேறு எதனாலும் உங்களுக்கு அமைதி தர முடியாது..

சந்தோசமாக ஏற்று கொள்ளும் போது சுமை தெரிவதில்லை...

மகத்தான விஷயங்கள் எப்பொழுதும
உங்களுக்குள்தான் ஆரம்பமாகின்றன..

ஒன்றை எந்த அளவு விரும்புகிறோமோ
அந்த அளவுக்கே அதைச் செய்கிறோம்...

தன் சொந்த இயல்போடு ஒத்திசைந்து
இருக்கும் வாழ்வே சந்தோசமானது...

எந்தத் துயரமும் காலத்தால் குறைக்கப்படாமல்
மிருதுவாக்கப் படாமல் போனதில்லை ..

நம்மில் நாம் திருப்தி காணவிட்டால்
அதை வெளியே தேடுவது பயனற்றது

மனதில் ஏற்படும் எத்தகைய பயங்களையும்
நீங்களாகவே முறியடித்துக் கொள்ள முடியும்

சரியான சந்தர்ப்பத்தில் பேசப்படும்
ஒரு வார்த்தை எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது

தயக்கத்தின் காரணங்களைப் புரிந்து கொள்ளும்போது
தயக்கம் தவிடுபொடியாகிறது

ஒரு மனிதனின் குணநலன்தான்
அவன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒருவர்...

உங்கள் ஆன்மாவை பொருத்தவரை
அதனால் இயலாதது என்று எதுவும் இல்லை

பலவீனமானவர்களின் வழியிலே தடைகல்லாய் இருப்பது
பலமுடையவர்களின் வழியிலே படிக்கல்லாகவே இருக்கும்...

திருப்தியான மனம் தான் உலகில்
ஒருவனக்குக் கிடைக்க கூடிய உயர்ந்த ஆசீர்வாதம்...

சிறப்பானவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால்
மோசமானவை ஒரு போதும் நிகழாது...

வாய்ப்பு என்பது உழைப்பென்னும் வேடமிட்டு
வருவதால் பலர் அதை தவறவிடுகிறார்கள்...

கைவிட நேரும் முயற்சி என்னைக் கலங்கடிப்பது இல்லை
அது முன்னேற்றத்திற்குப் படி அமைத்துக் கொடுக்கிறது...

முன்னேற்றத்திற்காக செய்யப்படும்
எந்த முயற்சியும் ஒரு போதும் வீணாவதில்லை...

நீங்கள் நேசிக்கப்பட வேண்டுமென்றால்
நேசிக்கப்படும் தன்மையோடு இருங்கள்...

உங்களுக்கு எது செய்யப்டக்கூடாது என்று விரும்புகிறிர்களோ
அதை அடுத்தவர்களுக்கு செய்யாதிர்கள்...

இயற்கையால் ஏற்றுக் கொள்ளும்படி
படைக்கப்படாத எதுவும் எவருக்கும் ஏற்படுவதில்லை...

தன்னைக் கையாள்வதில் உண்மையாக இல்லாத
எவராலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க முடியாது...

நம் வீட்டின் கணப்பின் அருகே சந்தோஷம் விளைகிறது
அதை அறியாதவர்களின் தோட்டத்தில் அதைப் பறிக்க முடியாது...

முற்றிலும் புதியதாக ஆரம்பிப்பது அவமானமில்லை...
அது ஒரு வாய்ப்பு...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்...

நீங்கள் கைவிட்டால் தவிர எப்பொழுதும்... நீங்கள் தோற்பதில்லை...
எப்போது நீங்கள் நினைத்தாலும் புதிதாக நீங்கள் ஆரம்பிக்கலாம்...

அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வரை கவலை...
அச்சம்.. பொறாமை உங்களிடம் குடி கொண்டிருக்கும்...

அடுத்தவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்...
நமது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஆயுள் கிடையாது...

நீ ஒருவரால் நேசிக்கப்படும் போது பலம் பெறுகிறாய்...
நீ ஒருவனை நேசிக்கும் போது தைரியம் அடைகிறாய்...

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல...
தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை...

தன்னைக் கையாள்வதில் உண்மையாக இல்லாத
எவனாலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க முடியாது ...

வானத்தில் வல்லூறுகளுடன் பறக்க விரும்புபவன்..
வாத்துக்களோடு நீந்திக் கொண்டிருக்க கூடாது...

வாழ்வின் சோதனைகளைக் கடந்து மேலெழ உதவும் சமநிலை
தவிர பொறுமை என்பது வேறென்ன ?

தோல்வியடைவது கஷ்டமானது தான்...
ஆனால் வெற்றிக்கு முயற்சிக்காதது அதை விட மோசமானது...

எப்பொழுதும் அன்பாய் இருங்கள்... நேற்றைப் பற்றி கவலையும்...
இன்றைய... நாளைய பயமும் இருக்காது... அன்பு காலத்தைக் கடந்தது...

தோல்வி என்பது உங்கள் மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனை
என்பதை உணர்ந்தால் அடுத்த கட்டத்திற்கு எளிதில் செல்லலாம்...

நீங்கள் வெற்றியாளராக வேண்டுமானால் எப்போதும்
பிறரோடு உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்கக் கூடாது...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்...

இன்றைய தினத்தை புதிய நாளாக மாற்றுங்கள்...
நாளைய தினம் ஆக்கப்பூர்வமான பொழுதாக விடியும்...

நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...
நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...

உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...
அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...

சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...

உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...
உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாக
ஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...

உன்னதமானவன் வாழ்வின் விபத்துக்களை அழகுடன்
பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டு
அந்த சூழலில் சிறப்பானதைச் செய்கிறான்...

உலகெல்லாம் அறியாமையில் மூழ்கி கிடந்தால்
மட்டுமே தான் ஒரு அறிஞ்சனாக பிரகாசிக்க முடியும்
என்பது மிகவும் இழிவு நிலை கொண்ட எண்ணம் ...

உங்களை நீங்களே தூய்மையாக
பிரகாசமாக வைத்து கொள்வது நல்லது...
உலகை நீங்கள் காண உதவும் ஜன்னல் நீங்கள் தான்...

அச்சம் வரும்போதேல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள்...
நம்பிக்கையின் உயரம்... அச்சத்தின் உயரத்தை விட அதிகமாய்
இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

உங்கள் வாழ்கைக்குள் வருகின்ற ஒவ்வொரு மனிதரும்...
ஒன்று உங்களுக்கு எதாவது கற்றுகொடுக்க வந்திருக்கிறார்...
அல்லது - உங்களிடமிருந்து எதாவது கற்று கொள்ள வந்திருக்கிறார் ..

சோம்பேறித்தனம் என்பது பணம் மாதிரி...
உங்களிடம் அது நிறைய இருக்க இருக்க மேலும் மேலும்
வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்...

சந்தோஷத்தைத் தேடி இந்த உலகில் அலைகின்றனர்
அது உங்கள் கைகெட்டும் தூரத்தில் இருக்கிறது
திருப்தியான மனம் எல்லாருக்கும் அதைத் தருகிறது...

நம்முடைய காலகட்டத்தில் புனிதத்துவத்தை
நோக்கிச் செல்லும் பாதை செயல் உலகின்
ஊடகச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்...

நேற்று செய்யவேண்டியதை இன்று செய்தால்... சோம்பேறி...
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால்... சுருசுறுப்பானவர்...
நாளை செய்ய வேண்டியதை இன்று செய்தால்... வெற்றியாளர்...

உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை
நீங்கள் அறிந்து கொள்ள ஒரே வழி
இடைவிடாது முயற்சி செய்து கொண்டிருப்பது தான்

சிரமங்களை இரண்டு விதமாய் எதிர்கொள்ளலாம்
சிரமங்களை சரி செய்வது அல்லது
அதை எதிர்கொள்ளும் விதமாய் நம்மை சரி செய்வது...

நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல...
உங்களிடம் என்ன மிச்சமிருக்கிறது
என்பது தான் முக்கியம்...

எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால்...
அது எதிர்கால வெற்றியை வரையறை
செய்யும் வாய்ப்பாக அமைகிறது...

சந்தோசத்திற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...
அது நமது எல்லைக்கு உட்படாதவற்றைப் பற்றி
கவலைப்படுவதை நிறுத்துவது...

அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து
அவர்களுக்காக எதாவது செய்யாவிட்டால்...
சந்தோசத்திற்கான சிறந்த வழியை இழந்து விடுகிறோம்...

உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை
சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
பிறகு வருவதை எதிர்கொள்ளுங்கள்...

சந்தோஷத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன்
அதிக இன்பமடைவான்... மிக உயர்ந்த... பல தரப்பட்ட...
நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே...

தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு தன்னைத் தொடர்ந்து
புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில் தான்
மனிதனின் நல்ல குணம் இருக்கிறது...

புதிய சிந்தனைகளை... வேதங்களை தேடி ஓடாதிர்கள்...
உங்களுக்குள்ளேயே உருவாக்குங்கள்..
அதுவே உங்களை உலகத்திற்கு அடையாளம் காட்டும்...

உன் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இரு...
அதற்கு நேர்மாறானவர்களுடன் நேரத்தை வீணாக்காதே...
நோக்கத்தை நோக்கி செயல்படு...

பெரும்பாலான சோதனைகளில் முக்கிய துன்பம் என்பது
நாம் உண்மையில் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதல்ல...
நாம் எவ்வளவு எதிர்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது...

ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளத் தேவைப்படுவது
எதுவென்றால் அவர் தன்னுடைய உணர்வு நிலையைத்
தானாகவே மாற்றிக் கொள்வது தான்...

தனக்குத் தானே உதவி கொள்ளாமல் எவராலும்
அடுத்தவருக்கு உதவ முடியாது என்பது
உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று...

உங்கள் கற்பனை எவ்வளவு வலிமை பொருந்தியதாக
உங்களை கனவு காணசெய்கிறதோ...
அதுவே நனவுகளை முன்னோக்கி
மனத்திலே வடிவமைத்து கொடுக்கிறது...

அதுத்தவர்களுக்கு நன்மை செய்வது கடமையல்ல
அது ஒரு சந்தோஷம்...
ஏனெனில் அது உங்கள் சொந்த ஆரோக்கியத்தையும்
சந்தோசத்தையும் அதிகரிக்கிறது...

உன்னுடைய பலம் எது பலவீனம் எது
என்று பட்டியலிடுவதை விட
பலத்தை மேன்மேலும் அதிகப்படுத்தும் போது
பலவீனம் காணமல் போகிறது...

சோம்பலுக்கு முன்னால் விலைமதிப்புள்ள
வாய்ப்புக்கள் பயனில்லாதவை...
ஆனால்.. கடுமையான உழைப்புக்கு முன்னால் மிக சிறிய
வாய்ப்புக்கள் கூட விலை மதிப்புள்ளவை...

சிக்கல்களை... சிக்கல் என்று நினைக்கும் போது
அவை பெரிதாகத் தோன்றும்...
சிக்கல்களை சவால்கள் என்று கருதும்போது...
எதிர்கொள்ளும் உந்து சக்தி உருவாகும்...

நாளையை நிறைவேற்றுவதில் உள்ளே
ஒரே தடை நமது இன்றைய சந்தேகங்கள் தான்
வலிமையான செயல்பூர்வமான
நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறுவோம்...

மற்றவர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதில்
இருந்து புதியதாகச் செய்ய பார்...
நீ எதை அடைய விரும்புகிறாயோ அதற்கு
அதை ஒத்துப் போகச் செய்வதில்தான் நீ வெளிபடுகிறாய்...

இந்த வாழ்வில் மன்னிக்க எதாவது
உங்களுக்கு இருந்தால் உடனே மான்னியுங்கள்...
மன்னிக்காமல் போவதை விட
மெதுவாக மன்னிப்பது மேலானது ...

எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது
வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம்
என்று பலருக்குத் தெரிவதில்லை...
எனவே தோல்வியைத் தழுவுகிறார்கள்...!

உங்களிடம் ஏற்கனவே என்ன இருக்கிறது என்ன இல்லை
என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருகாதிர்கள்...
உங்களிடம் இருப்பதில் சிறந்தது இல்லாவிட்டால் அதை
எவ்வளவு ஆவலோடு தேடுவீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்...

முக்கியமான ஒவ்வொரு அனுபவமும்
பின்னடைவாகக் கருதப்படலாம்... அல்லது
புது வகையான முன்னேற்றத்திற்கான
ஆரம்பமாகக் கருதப்படலாம்...

எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் ஒருநாள் சந்தோசமாக இருப்போம்
என்று பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே கழித்துக்
கொண்டு இருக்கிறார்கள்... ஆனால் நிகழ்காலம் மற்ற காலத்தை விட
ஒருவகையில் மேலானது... அது நம்முடையது ...

வாழ்கையில் போராடுகிற ஒவ்வொரு மனிதனுக்கும்...
வெற்றிக்கான உத்வேகத்தை தருவதும்...
அந்த வெற்றி சத்தியத்தின் வழயில் இருக்க செய்வதும்
நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உடனடி கடமை...

நீங்கள் முடிவு எடுத்திருக்கிறிர்கள் என்பதன் அடையாளம்
உங்கள் செயல் மாறியிருக்க வேண்டும்...
உங்கள் செயல் மாறவில்லை என்றால்
உண்மையில் நீங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை...

கடலில் நீண்டிருக்கும் நிலத்தைப் போல் நீங்கள் இருக்க வேண்டும்..
அதன் மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும்
அது உறுதியாக நிற்கிறது .
அதன் மேல் மோதும் ஆர்பரிக்கும்
அலைகள் அடங்கி அமைதியாகின்றன...

நமக்கு நன்றாக தெரிந்ததை...
சரியென்று புரிந்ததை செய்ய கூட பலர் துணிவதில்லை
ஆனால் துணிந்து இறங்கும் போது
நம்பிக்கை பல மடங்கு பெருகுவதோடு
நினைத்ததை விட மகத்தான வெற்றி பெற முடியும்...

உங்களால் பறக்க முடியவில்லையா ? ஓடுங்கள் ...
உங்களால் ஓட முடியவில்லையா ? நடங்கள் ...
உங்களால் நடக்க முடியவில்லையா ? தவழுங்கள் ..
ஆனால் ,எதைச்செய்தாலும்
உங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள் ..

எப்பொழுது உங்களால் கண்களுக்கு
தெரியாதனவற்றை பார்க்க முடிகிறதோ
எப்பொழுது நம்பமுடியாதவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை
உங்களுக்கு வருகிறதோ... அப்பொழுது எதை உங்களால் முடியாது என்று
உலகம் சொல்கிறதோ... அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்...

ஒரு மனிதன் வெளியே செய்வது
உள்ளே நினைப்பதன் வெளிபாடுதான்...
செயல் திறனோடு வேலை செய்ய...
அவன் தூய்மையாக யோசிக்க வேண்டும்...
மேலாக நடந்து கொள்ள... மேலாக சிந்திக்க வேண்டும்...

எங்கு படித்து இருந்தாலும் சரி.. அல்லது யார் சொல்லி இருந்தாலும் சரி..
அது முக்கியமில்லை அவற்றை நம்பாதே
அது நான் சொல்லி இருந்தாலும் கூட
உன்னுடைய அறிவுக்கும் உனக்கு உள்ள
பொதுமையான உணர்வுக்கும் ஒத்து வராவிட்டால்...

ஒரு முயற்சி போதும்...!
முயற்சிகள் தொடங்க ஒரு மரம் போதும்...
வானம் ஒன்று தொடங்க ஒரு மனது போதும்...
உத்வேகம் வழங்க ஒரு முடிவு போதும்...
இலட்சியம் வகுக்க...!

பிரபஞ்சத்துடன் மனிதனக்குள்ள ஒற்றுமை பற்றி
எனக்கு சந்தேகமில்லை... காரணம் கடந்த உணர்வு அது...
அது ஒரு மனிதனின் இதயத்தில்
இருந்த நம்பிக்கையின்மையை
தொட்டு அதை வேரோடு அழித்தது...

முதிர்ச்சி அடைவதில் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்று
சுயநலத்திலிருந்து அடுத்தவரை புரிந்து கொள்ளும் நிலைக்கு வளர்வது....
அடுத்தவர்களுக்கு ஒருவனாக தன்னை பார்க்காமல்...
தனக்கு அடுத்தவர் செய்ய விரும்புவதை
அடுத்தவர்க்கு செய்யாமல் ஒருவன் முதிர்ச்சி அடைவதில்லை...

தீர்மானமான தேவையற்ற வேகம் இல்லாமல்
முன்னேறுபவனுக்கு எந்தப் பாதையும் நீண்டதில்லை...
பொறுமையோடு வெற்றிக்காக
தன்னைத் தயார் செய்து கொள்பவனக்கு
அது தொலைவில் இருப்பதில்லை...

சந்தேகத்துடனோ அவநம்பிக்கையுடனோ
பயத்துடனோ நாம் அணுகினால்
நீடித்த அமைதியை நாம் பெற முடியாது...
பொறுப்பினால் ஏற்படும் புரிதல்...நம்பிக்கை..
தைரியத்துடன் நாம் முயன்றால் தான் அதை அடைய முடியும்...

இந்த உலகில் நான் ஒருமுறைதான் வலம் வருவேன்...
எனவே யாருக்காவுது எந்த நன்மையாவுது செய்ய முடிந்தால்...
யாருக்காவுது எதாவுது அன்பை என்னால் காட்ட முடிந்தால்...
நான் இப்பொழுது செய்து விடுகிறேன்...
தள்ளி போடவோ ஒதுக்கவோ கூடாது...
ஏன் எனில் இந்த வழியாக நான் மறுபடி போக முடியாமல் போகலாம்...

எவன் ஒருவன் மனதிற்கு ஒரு உந்துதலை கொடுக்கும் சக்தி பெற்று
எப்பொழுதும் மனதை ஊக்குவிக்கும்
எண்ணங்களாலேயே நிரப்பி கொள்கிறானோ
நம்பிக்கை மிகுந்த எண்ணங்களை..
உற்சாகமூட்டும் எண்ணங்களை நிரப்பி கொள்கிறானோ..
அவன்.. வாழ்க்கையின் ஒரு பெரும் புதிரை விடுவித்தவனாவான்...

உலகங்களே உங்களை அறிந்திருக்கும்
அறிவு கூட மேலோட்டமான அறிவு தான்
மற்றவர்கள் உங்களை குறைவாக எடைபோட்டால்
அதற்காக வருந்தாதிர்கள்...
உரிய நேரத்தில் உங்கள் செயல்திறன் வெளிப்படும் போது தான்...
உலகுக்கும் உங்களுக்கும்... உங்களை பற்றி தெரிகிறது...

இறுக்கமான சூழலை எதிர்கொண்டு
எல்லாமே உங்களுக்கு எதிராக இருந்தால்...
இன்னும் ஒரு நிமிடமும் நீடிக்க முடியாது என்று
தோன்றினால் கூட கைவிட்டு விடாதிர்கள்...
ஏனெனில் அந்த இடத்தில்..
அந்த நேரத்தில் தான் வாழ்வு திசை திரும்பும்...

நம்முடைய ஆர்வத்தை இழக்கும் நிலைமை பற்றி
நாம் எச்சரிக்கையாக இருப்போம் எதாவது ஒன்றில்
நாம் எப்பொழுதும் பெருமைக்குரியவர்களாகவே இருப்போம்
எதுவெல்லாம் நம்மை உயர்ந்த நிலைமைக்கு உள்ளாக்குகிறதோ
அதற்கான பாராட்டுதலை பெறுவதற்கு முயற்சி செய்வோம்...
அதில் நாம் காட்டும் ஆர்வம் தான் நம்முடைய வாழ்க்கையை
வளமடைய செய்து அழகுபடுத்துகிறது

பல ஆறுகள்.. விண்ணில் இருந்து மழை..
பல மருத்துவ குணமுள்ள நதிகள் போய் சேர்ந்தாலும்
கடலின் சுவை மாறுவதில்லை...
அதே போல் தைரியமுள்ளவன் நின் மனத்தை
சோதனையின் கனம் தாக்குவதில்லை..
அது தன் சமநிலையை நீடித்து இருக்கிறது..
ஏன் எனில் அது வெளி சுழலை விட
அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது...

வாழ்க்கை நம் மீது சில நேரம் பூக்களை வீசும்...
சில நேரம் பந்துகளை வீசும்...
பூக்கள் வீசினால் வைத்து கொள்ளுங்கள்...
பந்துகள் வீசினால் விளையாடி கொள்ளுங்கள்...
பாறாங்கற்களை வீசினால் விலகி கொள்ளுங்கள்...
மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும் போது
உங்கள் பலங்களை நினைத்து கொள்ளுங்கள்
மற்றவர்கள் உங்களை புகழும் போது
உங்கள் பலவீனங்களை நினைத்து கொள்ளுங்கள்...

சோதனைகளைக் கடந்து செல்வது...
ஒரு வெற்றியிலிருந்து இன்னொரு வெற்றி பெறுவது...
புதிய ஆசைகளை உண்டாக்குவது...
அவை நிறைவேறுவதைப் பார்ப்பதைவிட
வாழ்வில் சந்தோசமானது வேறில்லை...
உயர்ந்த.. பாராட்டதக்க முயற்சியில் ஈடுபட்டு
பாடுபடுபவனுக்கு சோர்வுகள்...
நம்பிக்கையினால் களைகின்றன...
பின்னர் சந்தோஷம் வந்து சேர்கிறது...
பிரச்சனைகளோடு போராடி அவற்றை
வெல்வது தான் மனிதத் திறமையின் உச்சகட்டம்.